தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிவகங்கை சமத்துவபுரம் சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

சிவகங்கை: சிவகங்கை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமத்துவபுரம் வழியாக செய்லும் சாலை சுமார் 1.5 கி.மீ. தூரம் சென்று அல்லூர் பனங்காடி சாலையில் இணைகிறது. சிவகங்கை நகர் விரிவாக்க பகுதியான அல்லூர் பனங்காடி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது.

தற்போது சாலை மிகவும் சேதமடைந்து பல்வேறு இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கற்கள் பெயர்ந்து வாகன டயர்களை பதம் பார்க்கிறது. சாலையின் இருபுறமும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வரும்போது டூவீலர், ஆட்டோக்கள் சாலையோரத்தில் வாகனங்களை ஒதுக்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சமத்துவபுரம் மற்றும் சிவகங்கையின் விரிவாக்க பகுதிகளுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையில் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

புறவழி சாலை அமைக்கும்போது கனரக வாகனங்கள் இந்த வழியாக சென்றதால் சாலை முற்றிலும் சேதமடைந்துவிட்டது. எனவே, உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

Related News