தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உயர்மட்டபால பணி சைட் அலுவலகம் தீப்பற்றியது

கூடுவாஞ்சேரி: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே புதிதாக கட்டப்படவிருக்கும் உயர்மட்ட பால கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சைட் அலுவலகம் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த அலுவலகத்தில் பரவிய தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை வண்டலூர் அருகே ஊரப்பாக்கம், ஜிஎஸ்டி சாலையோரத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு மாநகர, அரசு விரைவு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கு புதிதாக உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement

இதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் உயர்மட்ட பாலப் பணிக்கான சைட் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய உயர்மட்ட பாலப் பணி சைட் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென கரும்புகையுடன் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு படையினர், சைட் அலுவலகத்தில் பரவியிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதில் சைட் அலுவலகத்தில் இருந்த ஏசி மற்றும் கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைட் அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலை காரணமா என சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement