தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.6 லட்சத்தை பிரிப்பதில் தகராறு; தங்கையை கொன்று மூட்டையில் கட்டி வீசிய அண்ணன்: ‘கோதுமை’ மூட்டை என போலீசை ஏமாற்றியதால் பரபரப்பு

கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் சொத்து தகராறில் தங்கையை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய அண்ணன் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ராம் ஆசிஷ் நிஷாத் (32). இவருக்கும், இவரது தங்கை நீலம் (19) என்பவருக்கும் இடையே, நிலம் கையகப்படுத்தியதில் அரசு வழங்கிய ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த திங்கட்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம் ஆசிஷ், துணியால் நீலத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை சாக்கு மூட்டையில் திணிப்பதற்காக கை, கால்களை உடைத்து, மூட்டையாக கட்டி தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் உடலை வீசுவதற்காக சென்றபோது, வழியில் காவல்துறையினரின் சோதனைக்கு ஆளாகியுள்ளார். அப்போது அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, ‘சாக்கு மூட்டையில் இருப்பது கோதுமை’ என்று கூறி தப்பிச் சென்றுள்ளார்.

Advertisement

இதனிடையே, நீலத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் சத் பூஜைக்காக சென்றிருக்கலாம் என்று கருதி தேடி வந்துள்ளனர். இருப்பினும், ராம் ஆசிஷ் பெரிய சாக்கு மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவர் தனது தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்றிரவு கரும்புத் தோட்டத்தில் இருந்து அழுகிய நிலையில் நீலத்தின் உடலை காவல்துறையினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, ராம் ஆசிஷ் நிஷாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement