தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமுகை வனச்சாலையோரம் 1 டன் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில், குப்பைகள் சேகரிப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி அமைந்துள்ளது. இந்த வனச்சரக பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

Advertisement

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

சமீப காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி விட்டு வனச்சாலையோரம் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் வனவிலங்குகளுக்கு எமனாக மாறி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினரும் அவ்வப்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு பல்வேறு வகையில் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று சிறுமுகை - சத்தி செல்லும் சாலையில் அம்மன் புதூர் முதல் பால்காரன் சாலை வரை வனச்சரகர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர், சிறுமுகை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அடங்கிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வனச்சாலையோரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியின் போது சுமார் 1 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. முன்னதாக சிறுமுகை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் மனோஜ் கல்லூரி மாணவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

Advertisement

Related News