தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமுகை வனப்பகுதியில் அழுகி காய்ந்த நிலையில் சடலம் மீட்பு

* இறந்தது ஆணா, பெண்ணா? டிஎஸ்பி விசாரணை

Advertisement

மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க சடலத்தை அழுகி காய்ந்த நிலையில் மீட்டு டிஎஸ்பி விசாரணை நடத்தினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் களைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது சடலம் ஒன்று இருந்தது.

உடனடியாக வனத்துறையினர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமுகை இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அழுகி காய்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமானுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த டிஎஸ்பி அதியமான் தலைமையிலான போலீசார் மற்றும் கோவையில் இருந்து வந்த தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்தில் மாதிரிகளை சேகரித்தனர். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிறுமுகை போலீசார், இறந்தது ஆணா, பெண்ணா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 தனிப்படைகள் அமைப்பு

சிறுமுகை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் அழுகி காய்ந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் தலைமையில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் அம்பிகா மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து போனது ஆணா? பெண்ணா? என்பது கூட உடனடியாக கண்டறிய இயலவில்லை. இந்நிலையில் இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக வனப்பகுதிக்குள் வந்தார்? வன வேட்டை கும்பலை சேர்ந்தவரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Advertisement

Related News