தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமுகை அருகே 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு: வனப்பகுதியில் விடுவிப்பு

Advertisement

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பிடிபட்ட சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜீவா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியை ஓட்டி உள்ள பள்ளம் பகுதியில் நேற்றிரவு பாம்பு ஒன்று இருப்பதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் பூபதி மற்றும் யுவராஜ் இருவரும் அங்கு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் அங்கு புதரில் மறைந்திருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை வனச்சரகர் மனோஜ் குமார் அறிவுறுத்தலின் பேரில் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News