தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் தீவிரம்

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், கதிராமங்கலம், அட்டகுளம், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், திருவெண்காடு திருவாலி, கீழச்சாலை , மங்கைமடம், திருநகரி, புதுத்துறை, நாங்கூர், காத்திருப்பு, செம்பதனிருப்பு வடகால், எடமணல், கற்கோயில் தொழுதூர், எடக்குடி வடபாதி , உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தற்போது விவசாயிகள் பருவ மழை தொடங்கி விட்டதால் சம்பா நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன பெரும்பாலான இடங்களில் சுமார் 12000 ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் நேரடி நெல் விதைப்பு செய்வதால் விதை விடும் பணி நாற்று பறிக்கும் பணி நடவு பணி ஆகியவற்றின் செலவு மிச்சமாகும் எனவும் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதனைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் விதைப்பு பணியில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக விவசாயிகள் முதற்கட்டமாக சுமார் 4000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் சம்பா நடுபணிகளை தொடங்க விவசாயிகள் விதை விடும் பணியை தொடங்கியுள்ளன.

இதற்காக விவசாயிகள் டிராக்டர்களை பயன்படுத்தி வயலில் உழவு செய்து வாயில்களை சரி செய்து வருகின்றன, சில இடங்களில் விவசாயிகள் வரப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் சம்பா நடவு பணிகள் முழுமை பெறும் என்று நம்பலாம்.

Advertisement

Related News