சிராயன்குழியில் கழிவுநீர் ஓடையாக மாறிய சிற்றாறு பட்டணம் கால்வாய்
Advertisement
இந்நிலையில் தற்போது மீண்டும் கால்வாய் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் நிறைந்து கழிவுநீர் ஓடைபோல் காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்புகள், வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் நிறுத்தும் இடம் என எப்போதும் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில், கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் குப்பைகளை நீர்நிலைகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement