தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு உத்தர பிரதேசத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: 60 பிஎல்ஓக்கள் மீது வழக்கு பதிய உத்தரவு

பஹ்ரைச்: உபியில் சிறப்பு தீவிர திருத்த பணியை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 60 பிஎல்ஓக்கள் மீது வழக்கு பதிய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. பஹ்ரைச் மாவட்டம்,பரைன்பாக் ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியை ஷாமா நபீஸ் என்பவருக்கு தீவிர திருத்த பணி மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் நபீஸ்க்கு கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தெரிவித்திருந்தனர். எனினும் அவர் தீவிர திருத்த பணிகளை புறக்கணித்தார். அதே போல் பல்ஹா சட்டமன்ற தொகுதியில் உள்ள நவுசர் கும்டிஹா பள்ளியில் வாக்குசாவடி நிலை அதிகாரியாக(பிஎல்ஓ) இருந்த ஆசிரியரான அனுராக் தீவிர திருபணியில் ஈடுபட மறுத்து விட்டார்.

இது பற்றி தேர்தல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் 2 பேரையும் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் பணியில் அலட்சியம் இருந்த புகாரில் 60 பிஎல்ஓக்கள் மற்றும் 7 மேற்பார்வையாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950, பிரிவு- 32ன் கீழ் வழக்கு பதிய மாவட்ட கலெக்டர் மேதா ரூபம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News