தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: மேற்கு வங்க டிஜிபிக்கு உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியில் ஈடுபடும் வாக்காளர் நிலை அதிகாரிகளுக்கு (பிஎல்ஓ) கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும், பணிச்சுமையால் இதுவரை 40 பிஎல்ஓக்கள் இறந்திருப்பதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

Advertisement

இந்நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் சுஜீத் குமார் மிஸ்ரா மேற்கு வங்க மாநில போலீஸ் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பிஎல்ஓக்கள் மற்றும் பிற தேர்தல் களப்பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பல்வேறு தரப்பினரிடமிருந்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பிஎல்ஓ உள்ளிட்ட களப்பணியாளர்கள் பயம், அச்சுறுத்தல் இன்றி பணியாற்றக் கூடிய சூழலை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்தா குப்தாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுதவிர 12 ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News