தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் வெளிமாநில வாக்காளர்கள் கோடி பேரை சேர்க்க முடிவு: பாஜ மீது செல்வப்பெருந்தகை சாடல்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: எஸ்ஐஆர் விவகாரத்தில் பீகாரில் என்ன செய்தார்களோ அதையே தமிழகத்திலும் செய்யப் போகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கலாம். ஆன்லைனில் அவர்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பாஜ கூறுகிறது.

Advertisement

இதன்படி தேர்தல் ஆணையமும், பாஜவும் இணைந்து எங்கெல்லாம் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தமிழகத்தில் வாக்காளர்களாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதன்படி சுமார் ஒரு கோடி வாக்காளர்களை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதை தான் முதல்வர் தென்காசியில் பேசியிருக்கிறார். நாங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

தமிழகத்தில் இவர்களின் மோசடியை அனுமதிக்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை எஸ்ஆர்ஐ நடவடிக்கையை முழுமையாக எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு இது தேவையற்றது. இவ்வளவு காலமாக இருந்தது போலவே, தமிழகத்தில் தேர்தல் நடக்க வேண்டும். மாநில தொழிலாளர் ஆணையத்தில் உள்ள தரவுகளுக்கும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆகவே எஸ்ஐஆர் தற்போது தேவையற்றது. இவ்வாறு கூறினார்.

Advertisement