தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் செயல்முறை குறித்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் அவசியம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்

சென்னை: எஸ்ஐஆர் செயல்முறை குறித்து வெளிநாட்டு தமிழர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் அவசியம் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு : வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வாக்காளர் தொடர்பான எஸ்ஐஆர் செயல்முறையில் பல குழப்பங்கள் நிலவுகின்றன என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

எஸ்ஐஆர் தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான தனிப்பட்ட அறிவிப்பு மற்றும் விளக்கக் காணொளியை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்வந்து வெளிநாட்டு வாழ் தமிழர்களை தொடர்புகொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். புலம்பெயர் இந்தியர் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் வாயிலாகவும் தகவல் பரப்ப வேண்டும்.

சர்வதேச மொபைல் எண்களை கொண்ட பலர் ஓடிபி (OTP) பெற முடியாத நிலை காரணமாக பதிவு செயல்முறை தடுமாறுகிறது. மேலும் இந்திய குடியிருப்பாளர் வாக்காளர் மற்றும் இந்திய வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாட்டில் குழப்பம் இருந்து, பலர் பதிவு செய்யும் கட்டத்தில் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தரவு சேகரிப்புப் பணியாளர்கள் அதிகமாக உதவி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement