தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.ஐ.ஆர்., பூத் கமிட்டி பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: எஸ்.ஐ.ஆர்., பூத் கமிட்டி பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களோடு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisement

ஒவ்வொரு மாவட்டத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் திருத்தப்பணிகளை பணியாளர்கள் எந்த அளவிற்கு மேற்கொண்டு வருகிறார்கள். எந்த மாதிரியான பிரச்சனைகள் மாவட்டங்களில் இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு கையாண்டு வருகிறார்கள் என்பது குறித்து விரிவான ஆலோசனையினை மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.

ஏற்கனவே மாவட்ட செயலாளர்களிடம் பூத் கமிட்டி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருந்த நிலையில், இன்று காணொலி காட்சி வாயிலாகவும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

பூத் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்பது குறித்தான தகவல்களையும் கேட்டறிந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் எந்த அளவிற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். திருப்திகரமான செயல்பாடுகள் இல்லாத மாவட்ட செயலாளர்களை கடுமையான எச்சரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

Advertisement