தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்செட்டி அருகே சாலையில் உலா வந்த ஒற்றை யானை: போக்குவரத்து பாதிப்பு

Advertisement

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து உலா வருவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, மழை காலம் துவங்கியுள்ளதால் காடுகள் செழிந்துள்ளன. அதே வேளையில், யானைகளும் அடிக்கடி காட்டை விட்டு வெளியில் வந்து சாலைகளில் உலாவி வருகின்றன. நேற்று காலை ஒற்றை யானை ஒன்று அஞ்செட்டி வனப்பகுதியிலிருந்து வெளியே வந்தது. தொடர்நன்து அஞ்செட்டி -தேன்கனிக்கோட்டை சாலையில் நின்று கொண்டு மூங்கில் குறுத்துகளை சாப்பிட்டவாறு அங்கேயே உலவிக் கொண்டிருந்தது. அதனைக்கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். முன்னெச்சரிக்கையாக வந்த வழியாக சிலர் திரும்பிச் சென்றனர்.

வாகனங்கள் சத்தம் கேட்டு, நீண்ட நேரத்திற்கு பின்பு அங்கிருந்து மீண்டும் யானை காட்டிற்குள் சென்றது. அததனை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில், நேற்று காலை தேன்கனிக்கோட்டை பக்கமுள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்திற்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. பின்னர், தெருவில் ஹாயாக நடந்து சென்றது. அதனைக்கண்டு மக்கள் வீடுகளில் முடங்கினர். தொடர்ந்து அந்த யானை மத்திகிரி வனப்பகுதிக்கு சென்றது. கிராம பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்யை யானைனை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News