தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல்

*மன்னார்குடியில் 5 பேர் கும்பல் கைது

Advertisement

மன்னார்குடி : சிங்கப்பூரில் இருந்து திருவாரூருக்கு கடத்தி வந்த ரூ.2.50 கோடி மதிப்பிலான 2.7 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீசை விற்க முயன்ற 5 பேர் கும்பலை மன்னார்குடி வனத்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய பஸ் நிலையம் அருகே அம்பர் கிரீஸ் கட்டிகளை கடத்தி விற்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் நேற்று கிடைத்தது. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட வன அலுவலர் (பொ) கிருத்திகா உத்தரவின் பேரில் மன்னார்குடி வனசரக அலுவலர் சைதானி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வடுவூர் வடபாதி வடக்கு தெருவை சேர்ந்த சதீஷ் (40) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர், வடுவூர் வடபாதி நடுத்தெரு பாலமுருகன் (35), எளவனூர் வடக்குதெரு முருகானந்தம் (39), விவேகானந்தம் (64), முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம், அடைஞ்ச விளாகம் ஆனந்தராஜ் (39) ஆகியரோடு சேர்ந்து அம்பர் கிரீஸ் கட்டிகளை திருட்டுத்தனமாக விற்பனைக்கு சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 2.7 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.2.50 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Related News