தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சில்லிபாயின்ட்...

* கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் கால்பந்து பைனலில் மணிப்பூர் - மேற்கு வங்கம் அணிகள் நேற்று மோதின. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில் மணிப்பூர் 8-7 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்காக இடை நிறுத்தப்பட்டிருந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் ஆட்டங்கள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன. ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி - நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகள் மோதுகின்றன. ஆட்டம் தொடங்கும் நேரம் இரவு 8.00 மணிக்கு பதிலாக இரவு 7.30 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறும்போது மாலையில் தொடங்கும் ஆட்டத்தின் நேரம் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.00 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

* ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஆண்கள் ஐவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடக்கிறது. பி பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் நெதர்லாந்திடம் 7-4 என்ற கோல் கணக்கில் தோற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து 5-8வது இடங்களுக்கான ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது.