தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுப்புடவை, விலை உயர்ந்த போன் இருந்தும் கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

குருகிராம்: போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி, வாடகை கார் ஓட்டுநருக்குப் பயணக் கட்டணம் கொடுக்க மறுத்த பெண், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. டெல்லி அடுத்த குருகிராமில் ஊபர் கார் ஓட்டுநர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதில், பெண் பயணி பயணக் கட்டணமான 300 ரூபாயைக் கொடுக்க மறுத்துள்ளார். ‘போக்குவரத்து நெரிசலால் தாமதமானதற்கு ஓட்டுநரே காரணம்’ என்று அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு ஓட்டுநரோ, போக்குவரத்து நெரிசல் காரணமாக வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தாமதமானதாக விளக்கியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் கட்டணத்தைச் செலுத்தாமலேயே காரிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார். அவர் இறங்கிச் செல்வதற்கு முன்பு ஓட்டுநர், ‘உங்களால் 300 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை; நீங்கள் எல்லாம் காரில் செல்வதற்கு தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?’ என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விலை உயர்ந்த பட்டுப்புடவை அணிந்து, விலையுயர்ந்த செல்போனை வைத்திருந்த அப்பெண்ணின் செயலை இணையதள வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குருகிராமில் போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரணமான ஒன்று என்றும், அதற்கு ஓட்டுநர் பொறுப்பல்ல என்றும் பலரும் ஓட்டுநருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Related News