தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘உங்க நாட்டுக்கு திரும்பி போங்க’ இங்கிலாந்தில் சீக்கிய பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: இனவெறி தாக்குதலால் இந்தியர்கள் அச்சம்

ஓல்ட்பரி: இங்கிலாந்தில் சீக்கிய இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, இனவெறி தாக்குதலுக்கும் ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வால்வர்ஹாம்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றின் வௌியே நின்றிருந்த வயதான இரண்டு சீக்கியர்களை மூன்று வாலிபர்கள் பயங்கரமாக தாக்கினர். இந்நிலையில் மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல் நடந்துள்ளது.

Advertisement

இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தின் டேம் சாலை அருகே 20 வயது சீக்கிய பெண் கடந்த செவ்வாய்க்கிழமை(9ம் தேதி) காலை 8.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் சீக்கிய பெண்ணை இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News