தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா தேரோட்டம் கோலாகலம்

நாகை: நாகை சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகா... முருகா... கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில் உள்ளது. இது கிபி 4ம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்ட மாடகோயிலாகும். கோயிலில் வெண்ணெய் பெருமான் நவநீதேஸ்வரராகவும், பார்வதி வேல்நெடுங்கண்ணியாகவும் அருள்பாலிக்கின்றனர். தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகன் வதம் செய்ததாகவும், அந்த பாவம் தீர நாகை மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் முருகன் சிவனை நோக்கி தவம் இருந்ததாகவும் ஐதீகம்.

Advertisement

இத்தகைய சிறப்பு பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 21ம் தேதி துவங்கியது. 22ம் தேதி தங்க மஞ்ச வாகனம், 23ம் தேதி பவள ஆட்டுகிடா வாகனம், 24ம் தேதி வெள்ளி மயில் வாகனம், 25ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. காலை 5 மணிக்கு சிங்காரவேலவர் (முருகன்) வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து தேர் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகா முருகா என்று கோஷத்தோடு ேதரை வடம் பிடித்து இழுத்தனர். ேதர்தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கீழவீதி வந்து மீண்டும் தேரடிக்கு வந்தது.

இன்றிரவு வேல்நெடுங்கண்ணியிடம் (பார்வதி) சாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (27ம் தேதி) இரவு தங்க ஆட்டுகிடா வாகனத்தில் சிங்காரவேலவர் எழுத்தருளி சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 29ம் தேதி வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. 30ம் தேதி விடையாற்றி விழா நடக்கிறது. 31ம் தேதி யயதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement

Related News