தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய கவர்னர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நெல்லை: நெல்லையில் நேற்று இரவு அவர் அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சரால் இந்த மாதம் 2ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வருவாய் மாவட்டத்தில் இந்த முகாம்கள் தொடர்ந்து 3 வாரம் நடத்தப்பட்டுள்ளது. நேற்றுடன் 74 முகாம்கள் வாயிலாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 458 பேர் பயனடைந்துள்ளனர்.ஒவ்வொரு வாரமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைகின்றனர். உடல் உறுப்பு தானம் பெறுவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

Advertisement

சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழக கோரிக்கை ஏற்று இந்த அரசு பொறுப்பேற்ற உடன் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஒப்புதல் அளிக்காமல் 4, 5 முறை திரும்ப திரும்ப திருப்பி அனுப்பப்பட்டது. 21.8.2025 அன்று மீண்டும் 4 திருத்தங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்துறை திருத்தங்கள் சரி செய்து இந்த வாரத்தில் முடிவு எடுத்து அடுத்த சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு எம்ஆர்ஐ உள்ளது. தேவைப்பட்டால் மற்றொரு எம்ஆர்ஐ கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கிராம சுகாதார செவிலியர்கள் பணி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 30 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருந்தன. இந்த வழக்குகள் மூத்த வழக்கறிஞர்கள் வாதம் வைத்து தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் தீர்ப்பு விவரம் வந்தவுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபருக்கு பணி ஆணை முதல்வரால் வழங்கப்படும். நேற்று கூட 644 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்னர் 2642 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது என்றார்.

Advertisement

Related News