தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.ஐ தம்பதியின் மகளை காதலித்த சென்னை ஐடி ஊழியர் நெல்லையில் கொலை: வாலிபர் சரண்

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் போலீஸ் உதவி ஆய்வாளர் மகளை காதலித்த சென்னை ஐடி ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எஸ்.ஐ தம்பதியின் மகன் போலீசில் சரணடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின்குமார் (28). இவர் பட்டப்படிப்பு முடித்து சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், வயதான தாத்தாவை அழைத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக பாளை கேடிசி நகர் முதலாவது தெருவிலுள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு நேற்று காலையில் வந்தார்.
Advertisement

சிகிச்சைக்கு பின்னர் மாலை 3 மணிக்கு மேல் தாத்தாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் கவின்குமாரிடம் தகராறு செய்து அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில் ராஜபாளையம், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்.இன்ஸ்பெக்டர்களாக வேலை பார்க்கும் தம்பதியின் மகளும், கவின்குமாரும் தூத்துக்குடியிலுள்ள ஒரு பள்ளியில் படித்த போது நட்பாக பழகி வந்தனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதாம். இதனையறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் தூத்துக்குடியை விட்டு பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர்.

ஆனாலும் இளம்பெண்ணும், கவின்குமாரும் செல்போனில் அடிக்கடி பேசி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த இளம்பெண்ணின் தம்பி சுர்ஜித் (24) ஆத்திரமடைந்து, பாளை கேடிசி நகரிலுள்ள சித்த மருத்துவமனைக்கு சென்று தாத்தாவுடன் திரும்பி கொண்டிருந்த கவின்குமாரை நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று சுர்ஜித் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement