தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எஸ்.ஐ அறையில் தொழிலாளி தற்கொலை கோவை போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை

கோவை: கோவை கடை வீதி போலீஸ் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் கடந்த 6ம் தேதி இரவு 11.30 மணியளவில் பேரூர் ராமசெட்டிப்பாளையம், காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜன் (60) என்பவர் புகுந்து எஸ்.ஐ., அறை மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சாவில் சந்தேகம் எதுவும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பணியில் கவன குறைவாக இருந்த காவலர் செந்தில்குமார் மற்றும் எஸ்.ஐ. நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் வெர்ஜினி வெஸ்டா போலீஸ் ஸ்டேசனில் ராஜன் தற்கொலை விவகாரம் குறித்து பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.