தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி எஸ்.ஐ அதிரடி கைது

திருப்பூர்: திருப்பூரில் எஸ்ஐ வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திம்மன்குத்து, தப்பட்டைகிழவன் புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரது மகன் பிரசாந்த் (22). இவர், காவல்துறையில் பணிக்கு சேர முயற்சித்து வந்துள்ளார். இந்த சூழலில், இவரது உறவினர் ரமேஷ் என்பவர் மூலம் குட்டி (எ) ஜெயராஜ் (42) பிரசாந்துக்கு அறிமுகமாகியுள்ளார்.
Advertisement

இந்நிலையில், எஸ்.ஐ தேர்வு எழுதாமலேயே பணி வாங்கி தருவதாக பிரசாந்திடம் ஜெயராஜ் கூறியுள்ளார். இதற்காக ரூ.25 லட்சம் பேரம் பேசியுள்ளனர். முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயும், 2ம் தவணையாக 5 லட்சம் ரூபாயும் பிரசாந்த், ஜெயராஜிடம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஜெயராஜ், திருப்பூர் மாநகரில் நல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ள முரளிதரன் (52) மூலம் வேலை பெற்று தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து பிரசாந்திடம் பெற்ற பணத்தை ஜெயராஜ், அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் மற்றும் நல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோருடன் பங்கிட்டுள்ளனர்.

இந்நிலையில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பிரசாந்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசாந்த் இதுகுறித்து கடந்த 7ம் தேதி கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, பணம் பெற்று மோசடி செய்த ஜெயராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான கிருஷ்ணராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement