கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரை சேர்ந்த 16 எஸ்ஐ உள்பட 62 போலீசார் வேலூர் சரகத்திற்கு மாற்றம்: சாராய வியாபாரிகளுடன் தொடர்பால் ஐஜி நடவடிக்கை
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் வேலூர் சரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் ஒருவர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 31 போலீசாரும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 14 போலீசாரும் வேலூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில போலீசார் அடுத்த கட்டமாக காஞ்சிபுரம் சரகத்துக்கு மாற்றப்படுவதற்கான பட்டியல் தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Advertisement