தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டை குண்டுவெடிப்பில் கைதான சோயாப்பின் என்ஐஏ காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு

 

Advertisement

புதுடெல்லி: செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சோயாப்பிற்கு மேலும் 10 நாட்கள் என்ஐஏ காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செங்கோட்டையில் குண்டு வெடித்த வழக்கில் குண்டுவெடிப்பை நடத்திய உமர் உன் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரிதாபாத்தை சேர்ந்த சோயாப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

அவரது 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று பலத்த பாதுகாப்புடன் சோயாப் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிபி அஞ்சு பஜாஜ் சந்த்னா அவருக்கு மேலும் 10 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வெள்ளை காலர் தீவிரவாதத்துடன் தொடர்புடைய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழாவது குற்றவாளி சோயாப்.

 

Advertisement