வனபத்ரகாளியம்மன் கோயில்: 40 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்கினர்
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை 5.45 மணிக்கு துவங்கியது. குண்டம் திருவிழாவிற்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்றிரவு வந்து காத்திருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Advertisement