தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வால்பாறையில் ஓய்வு அறைகள் இல்லாததால் வேனில் சாப்பிடும் சுற்றுலா பயணிகள்: மேம்படுத்த கோரிக்கை

வால்பாறை: வால்பாறையில் அடிப்படை சுற்றுலா மேம்பாடு அவசியம் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். வால்பாறை கோவை மாவட்டத்தின் கோடை வாசஸ்தலம் ஆகும். மாவட்ட நிர்வாகம் 7ம் சொர்க்கம் என செல்லப் பெயர் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். வால்பாறையில் சுற்றுலா மேம்பாட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Advertisement

வால்பாறையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு இல்ல மேம்பாடு, பூங்கா மேம்பாடு, சுத்தமான கழிப்பிடங்கள், போதுமான இடங்களில் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்த நடவடிக்கை, சாலைகளில் போதுமான சிக்னல்கள் மற்றும் டிவைடர்கள் வைக்கப்பட்டு சாலை ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும்.

சுற்றுலா தலங்களில் வழிகாட்டி பலகைகள் அமைக்கவேண்டும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கும் தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும், ஓய்வு அறைகள் அமைக்கப்பட வேண்டும், சுற்றுலா பயணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் அனுபவத்தை சிறப்பாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை மேம்பாட்டு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement