தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரபிரதேச மாநிலத்தில் ‘நீண்டகால முதல்வர்’ சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரபிரதேச அரசியலில் நீண்ட காலம் பதவியில் நீடிக்கும் முதல் முதல்வர் என்ற நிலையை யோகி ஆதித்யநாத் எட்டியுள்ளார். பாஜக மூத்த தலைவரான யோகி ஆதித்யநாத், உத்திரப் பிரதேசத்தின் 22வது முதல்வர் ஆவார். கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடத்தின் மடாதிபதியாக இருந்த இவர், கடந்த 1998ம் ஆண்டில் தனது 26வது வயதில் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து ஐந்து முறை கோரக்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement

கடந்த 2017ம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் மிக முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தத் தேர்தலில் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 19, 2017 அன்று உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதலமைச்சரானார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் மிக நீண்ட காலம் முதல்வர் பதவியில் நீடிக்கும் முதல் தலைவர் என்ற புதிய சாதனையை யோகி ஆதித்யநாத் படைத்துள்ளார்.

அம்மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்தின் சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். யோகி ஆதித்யநாத் இதுவரை 8 ஆண்டுகள் மற்றும் 132 நாட்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். முன்னாள் முதல்வர் பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்தின் மொத்தப் பதவிக்காலம் 8 ஆண்டுகள் மற்றும் 127 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News