தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்து வகையான முடிவுகளும் எடுக்கப்படும் : ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு!!
தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்துவகையான முடிவுகளும் எடுக்கப்படும். இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் தேசிய நலனுக்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கனவே இந்தியா செய்துள்ளது. 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு. சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், தொழில்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது.நமது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்று பியூஷ் கோயல் கூறினார்.