தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் : மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் விண்ணப்பம்

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளின் சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் வரை 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்புறப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஊரகப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. முகாம்களுக்கு அதிக ஆர்வத்துடன் வருகை தரும் பொதுமக்கள், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி மனு அளிக்கின்றனர். இந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 5.88 லட்சம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

Related News