தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ.1.06 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருச்சி: திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.06 லட்சத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் வழங்கும்போது நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் திடீரென சென்றனர்.
Advertisement

பின்னர் அலுவலக கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சோதனை நடத்தினர். அதில், 2 புரோக்கர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஆர்டிஓ நடராஜனின் காரில் சோதனை நடத்தி ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. இவை கணக்கில் வராத பணமாகும்.

நேற்றிரவு 8.30 மணி வரை ஆர்டிஓ நடராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆர்டிஓவுக்கு ஆதரவாக புரோக்கர் சேதுராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலாவுக்கு ஆதரவாக புரோக்கர் ரமேஷ் ஆகியோர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆர்டிஓ அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சத்துடன் போலீசார் புறப்பட்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News