திண்டிவனம் அருகே பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும் இடது கையை தொடை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும் இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் இவர் அமர்ந்து இருக்கிறார். வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும் பூரணி பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்ட எதுவும் இந்த சிற்பத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் காலத்தால் முற்பட்ட சிற்பமாக இது இருக்கலாம். இதன் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட ஐயனார் சிற்பங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று இங்கு காணப்படுகிறது. மேலும் சிவாலய வளாகத்தில் உள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும் அன்னப்புத்தூர் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம். பல்லவர் காலத்திலும் அதனை தொடர்ந்து சோழர் காலத்திலும் அன்னம்புத்தூர் கிராமம் சிறந்து விளங்கியது என்பதை இங்கிருக்கும் வரலாற்று தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.