தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா: கோலாட்டம், கும்மியாட்டத்துடன் 35 ரதங்களில் அம்மன் ஊர்வலம்

தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநால்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் 3வது ஆடி வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றுது. இந்த விழாவில் 35 ரத ஊர்திகளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மல்லி, முல்லை, ரோஜா என வாசனை பெற்ற பூக்களை 5,000 கூடைகளில் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இதையடுத்து கோயில் வாசலில் தார தப்பட்டை, ஆட்டம், பாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் என ஏராளமான பக்தர்கள் வேப்பிலை வைத்து சாமி ஆடி வந்தனர். இன்று காலை முதலே 5,000க்கு மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.