தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வராயன்மலை சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கல்வராயன்மலை: கல்வராயன்மலை பகுதியில் உள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் தற்போது அதிகளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. அதற்கு இணையாக கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை விளங்கி வருகிறது. இதன் மற்றொரு பகுதி சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பார்வையில் படாத இந்த மலைப்பகுதி பச்சைபசேல் என பசுமையுடன் காணப்படுகிறது. அதிகளவில் கட்டிடங்கள் கட்டப்படாததால் இயற்கையுடன் இணைந்து காணப்படுகிறது. ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன.
Advertisement

பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்றின் வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்தில் இருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்வராயன்மலையில் கவியம், தேம்பாவணி, முட்டல், மேகம், பெரியார் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர். மலைச்சாலையை ஒட்டி உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி குறைந்த உயரம் கொண்டது. இதில் மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் கொட்டும்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் கல்வராயன்மலை வட்டம் அத்திக்குளி அருகே சிறுகலூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை போன்று உயரமாக காணப்படுகிறது. இங்கு விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி ஊரிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கல்வராயன்மலையை சுற்றிப்பார்க்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனால் இங்கு குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள், மேடை போன்ற எந்த வசதியும் இல்லை. போக்குவரத்து வசதியும் சரியாக இல்லை. பாறை நிறைந்த பாதையில்தான் நடந்து செல்ல வேண்டும். இதுதவிர உடை மாற்றும் அறைகள், சிற்றுண்டி கடைகளும் இல்லை. எனவே தமிழக அரசு கவனிக்கப்படாத நீர்வீழ்ச்சிகளை கண்டறிந்து அவற்றை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கு அதிக வருவாய் கிட்டும். போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும். பெரிய சுற்றுலா மையமாக மாற்றித்தர வேண்டும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுது போக்கி வரலாம். எனவே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement