தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செந்தில் பாலாஜி வழக்கு; குற்றவாளியா, குற்றம்சாட்டப்பட்டவரா?: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் செந்தில் பாலாஜி குற்றவாளியா அல்லது குற்றம்சாட்டப்பட்டவரா என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நகை நட்டுகளை விற்றுப் பணம் கொடுத்திருப்பதால், பிரதான குற்றவாளியான செந்தில்பாலாஜி மீதான வழக்கை தனியாக விசாரிக்கக் கோரியும் மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி குற்றவாளியா அல்லது குற்றம்சாட்டப்பட்டவரா என்பதை முதலில் அறிய விரும்புகிறோம்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரமிக்க அரசியல்வாதியாகவும், மக்கள் செல்வாக்கு பெற்றவராகவும் இருக்கிறார். அமைச்சர் பதவியை வகித்த ஒருவர், அரசு வழக்கறிஞர் மூலம் வழக்கை எதிர்கொள்வது சரியல்ல என்பது எதிர் தரப்பினரின் கவலையாக உள்ளது.

எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,500 பேரின் முழு விவரங்கள், பணம் கைமாறிய விதம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement

Related News