தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி இழப்பு: கவுன்சிலர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்

தென்காசி: சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி பதவி இழந்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் மன்றத் தலைவி உமா மகேஸ்வரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்ய முன்வரவில்லை என்றும், தெருவிளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எவற்றிலும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் கடந்த கூட்டத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், 30 கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி பதவி பறிபோனது. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இவருக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும், புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.