சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற ஏடிஜிபி கலால் துறைக்கு மாற்றம்
இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி போலீஸ் ஏடிஜிபியே டிராக்டரில் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏடிஜிபி அஜித்குமார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து ஏடிஜிபி அஜித்குமார் டிராக்டரில் சென்றது தவறுதான் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டிஜிபி ரவடா சந்திரசேகர் கேரள அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் ஏடிஜிபி அஜித்குமாரை கலால் துறை ஆணையராக மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கடந்த வருடம் நடந்த திருச்சூர் பூரம் திருவிழாவில் ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.