தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புத்துக்கோயில் பகுதியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த கேரள பெண்: ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி ரோகிணி. இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷ் தந்தை சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பத்துக்காக கணவர், மனைவி இருவரும் திருவனந்தபுரம் ரயிலில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில் வந்து கொண்டு இருந்தபோது ராஜேஷ் மற்றும் ரோகிணி இருவரும் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். பின்னர் ராஜேஷ் மட்டும் இருக்கைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் தனது மனைவி இருக்கைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கணவர் இதுகுறித்து காட்பாடி ரயில் நிலையத்துக்கு புகார் கொடுத்துள்ளார். புகார் பெயரில் காட்பாடி ரயில்வே போலீசாரும், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரும் ரோகிணியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்து புதுக்கோயில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரோகிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து இருப்பதாக தெரிய வந்தது. இதைதொடர்ந்து ரோகிணி உடலை மீட்டு ஜோலார்பேட்டை காவல் துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News