தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை வழங்குவார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை புரிகிறார். பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கை மனு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்த மனுவினை நிதி, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் அளிக்க உள்ளார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குறிப்பினர் கனிமொழி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இது தொர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் மருத்துவமனையில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இந்த மனுவை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் வழங்குவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.