தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போர்ச்சுகல், பல்கோரிய, ஸ்பெயினை அச்சுறுத்தும் காட்டுத் தீ: தீயை அணைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

லிஸ்பன்: போர்ச்சுகல், பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மலை தொடரில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்காக வனப்பகுதிகள் தீயில் கருகியுள்ளன. போர்ச்சுகல்லில் அரோகா மலை தொடரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் போராடி வருகின்றன. கேசரஸ் கிராமத்தில் அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில் 500க்கு மேற்பட்ட மீட்பு படையினர் தீயணையை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மலையை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல்கேரியா நாட்டின் பிளாகோவ்கிராட் மலை தொடரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க வானிலை சாதகமா இல்லாததால் தீயை அணைப்பதில் சவால் ஏட்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மலை தொடரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராணுவ விமானம் மூலம் தண்ணீர் வீழ்ச்சி அடிக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டின் கேசரஸ் மலை தொடரில் காட்டுத்தீ அருகில் உள்ள கிராமங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் 200க்கும் மேற்பட்ட குடுபத்தினரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளனர். மீட்பு பணியில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் களம் இறங்கி அடர்வனத்துக்குள் சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி வருகின்றனர். காட்டுத்தீ பரவியதற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பம் நிலை உயர்வே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.