தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் ரயிலில் இறங்க முயன்றபோது விபரீதம்; நடைமேடையில் சிக்கிய பயணியை துரிதமாக காப்பாற்றிய போலீசார்: குவியும் பாராட்டு

ஈரோடு: கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஈரோடு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவர் ரயில் நிற்பதற்கு முன்பாகவே ‘டீ’ வாங்குவதற்காக மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றார். இதில், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே அவர் தவறி விழுந்தார். ரயிலின் படிக்கட்டு கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டதால், நடைமேடையிலேயே இழுத்து செல்லப்பட்டார்.
Advertisement

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார். அவர் விரைந்து செயல்பட்டதால் அந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக்கிற்கு ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பாராட்டினர்.

இதுதொடர்பாக, ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக், சவால்களை எதிர்கொள்வதில் மிகுந்த துணிவும், விரைவான சிந்தனையும் கொண்டவர் என பாராட்டு பெற்றுள்ளார். கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு, காப்பாற்றியுள்ளார். இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையை வெளிப்படுத்துகிறது.

அப்துல் ரபீக்கின் வீரத்திற்காகவும், அவரது துணிவிற்காகவும், உறுதியான கடமைக்காகவும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது தன்னிச்சையான செயல்பாடு என்பது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும், ரயில்வே பாதுகாப்பு படையின் பணியை வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News