தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊறுகாய் பாட்டிலில் போதை பொருள்: 3 பேர் கைது

திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் உள்ள நண்பருக்கு கொடுத்து அனுப்பிய ஊறுகாய் பாட்டிலில் எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பக்கத்து வீட்டு வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே சக்கரக்கல் பகுதியை சேர்ந்தவர் மிதிலாஜ். சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். நேற்று மீண்டும் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜிசின் என்ற வாலிபர், சவுதி அரேபியாவில் உள்ள தன்னுடைய நண்பருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ஒரு ஊறுகாய் பாட்டிலை கொடுத்துள்ளார். அதை மிதிராஜ் வாங்கி வைத்தார். சிறிது நேரம் கழித்து ஊறுகாய் பாட்டிலை பேக்கில் வைப்பதற்காக எடுத்தபோது அதில் சீல் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் பாட்டிலில் இருந்த ஊறுகாயை வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது அதில் ஒரு சிறிய பிளாஸ்டிக் கவர் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மிதிலாஜ் இதுகுறித்து உடனடியாக சக்கரக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பிளாஸ்டிக் கவரை பிரித்துப் பார்த்தனர். அப்போது அதில் 2.6 கிராம் எம்டிஎம்ஏ வும், 3.4 கிராம் ஹாசிஷ் ஆயிலும் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் போதைப்பொருளை கொடுத்த ஜிசினையும் (28), அவரது கூட்டாளிகளான அர்ஷாத் (31), ராம் (24) ஆகியோரை கைது செய்தனர். இந்த போதைப்பொருள் விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டிருந்தால் மிதிலாஜின் எதிர்காலமே வீணாகி இருக்கும் என்று சக்கரக்கல் போலீசார் தெரிவித்தனர்.

Related News