தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரும்பாக்கத்தில் கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் 3 மகளுடன் வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் பிளாக் 11ல் வசித்து வந்தவர் ஐஸ்வரியா (34). இவரது கணவர் இளையராஜா. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனது அண்ணன் ஆனந்தராஜ் வீட்டில் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹாஸ்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார்.
Advertisement

இந்தநிலையில் நேற்று இரவு வேலை முடிந்து 11 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், செல்போனில் பேசிவிட்டு படுக்கையறைக்கு சென்று உள்தாழ்ப்பாள் போட்டுள்ளார். வெகுநேரமாக கதவை திறக்காததால் இவரது அண்ணன் மகன் விக்னேஷ்வர் கதவை தட்டியுள்ளார்.

பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஐஸ்வரியா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News