தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியது ஆணவப்பேச்சு: முத்தரசன் பேட்டி

தர்மபுரி: தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் பிரசாரம் செய்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை என்று சொன்னார். அதன் பிறகு சிதம்பரத்தில் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்தால், ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று சொன்னார். அது ரத்தக்கறை படிந்த கம்பளம் என எதிர் வினையாற்றினோம். வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற கட்டாயத்தில், எடப்பாடியை நிர்பந்தப்படுத்தி அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்துள்ளது.

அதில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். ஆனால், எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறார். மற்றக் கட்சிகளுடன் கூட்டணி சேர்க்க விஜய் கூப்பிடுகிறார். ஆனால், விஜய் நான் தான் முதல்வர் என்கிறார். சீமான் தொடக்கத்திலேயே கதவை மூடி விட்டார். அப்பா-மகன் குடும்ப சண்டையால் பாமக பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில் சேலத்தில் நடைபெறும் சிபிஐ மாநில மாநாடு, முக்கியத்துவம் பெறும் வகையில் இருக்கும். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை.

நிரந்தர எதிரியும் இல்லை என்ற கொள்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு நிரந்தர எதிரி ஆர்எஸ்எஸ் தான். இதுதான் எங்கள் அரசியல். ஆர்எஸ்எஸ்சை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் சேருவோம். நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியது ஆணவப்பேச்சு. அதனை முழுமையாக கேட்டுப் பாருங்கள் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை சேலத்தில் நடக்கிறது. 16ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தமிழக அரசியல் குறித்து ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related News