தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் ரயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் பொதுமக்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மீஞ்சூர் முதல் காட்டூர் வரையிலான சாலைக்கு இந்த கட்டுமான பணிகள் நடைபெற்றுவரும் சூழலில் ரயில்வே தண்டவாளத்தின் மேலே பாலம் பணிகள் முடிந்து இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த ரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் புறநகர் ரயில்களும் கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் காலையில் அலுவளகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.