தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2026ல் திமுக ஆட்சி தான் அமையும்; எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் பகுதியில் 56 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் விடுதி கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Advertisement

56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்கள் விடுதி, மாணவிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், “தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை செய்தார், கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மைய கருத்தாக உள்ளது.

அந்த வகையில் இந்தியாவிலேயே உயர்கள்ளியின் முக்கியத்துவத்தை தமிழகம் பெற்றுள்ளதாகவும், மாணவர்கள் சிறந்து விளங்கினால் தான் மேல்நிலைக் கல்வியில் முதலிடம் பெற முடியும். குறிப்பாக 56 கோடியே 47 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம், மாணவர்கள் தங்கும் விடுதி, மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும், 95 சதவீத பணிகள் தற்போது முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் விரைவில் இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைப்பார். மேலும் 22 பள்ளி அறைகள், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வகங்கள் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் மோடி வருகை குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர், “கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து பாரத பிரதமர் தமிழில் உரையாற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். கனவு காண்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது, கனவு காண்பது அவர் அவர்களின் விருப்பம். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். 2026ல் திமுக தலைமையிலான ஆட்சி தான் அமையும் என நடுநிலையாளர்கள் தெரிவித்து வருவதாக கூறினார்.

Advertisement

Related News