தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மயிலாடுதுறை, புதுகையில் பாபநாசத்தில் பலத்த மழை 3,000 நெல்மூட்டைகள் சேதம்

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிந்தது.

குறிப்பாக நகர் பகுதிகளில் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதேபோல் குத்தாலம், பாலாக்குடி, வில்லியநல்லூர், நீடூர், மணல்மேடு, பட்டவர்த்தி செம்பனார்கோயில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டையில் கடற்கரை பகுதியான அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 7 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. தஞ்சையில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அருகே வாழ்க்கை கிராமத்தில் மழையால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, இயக்கம் செய்யப்படாமல் இருந்த 1000 நெல்மூட்டைகளும், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 2 ஆயிரம் நெல்மூட்டைகளும் மழை நீரில் நனைந்தன. இதனை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.