தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு போட்டி பயிற்சி: 120 பேர் பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடல்பகுதியில் இன்று காலை ஆசிய அலைச்சறுக்கு போட்டிக்கான முதல் கட்ட பயிற்சிகள் துவங்கியது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 120 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். ஆசிய அலைச்சறுக்கு அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் சார்பில், மாமல்லபுரம் கடற்கரையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 2025ம் ஆண்டுக்கான ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
Advertisement

இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சீனாவின் தைபே, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் உள்பட 20 நாடுகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக்கு இன்று காலை வெளிநாடுகளை சேர்ந்த சிலர் வந்து, கடலில் அலைச்சறுக்கு பலகைகள் மூலம் முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா சார்பில் பங்கேற்கும் 12 பேரில், 8 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களும் இன்று முதல் அலைச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News