தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா, மபி உள்ளிட்ட 6 மாநிலங்களில் ரூ.11,169 கோடி ரயில்வே திட்டங்கள்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ரூ.11,169 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மகாராஷ்டிரா,மபி, மேற்கு வங்கம், பீகார்,ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ரயில்வேயில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். 4 மாநிலங்கள்,13 மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு திட்டங்களும் ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை 574 கிமீ அதிகரிக்க செய்யும். நாக்பூர்- இட்டர்சி 4வது பாதை, அவுரங்காபாத்(சத்ரபதி சம்பாஜி நகர்)மற்றும் பர்பானி பாதை இரட்டிப்பாக்குதல், அலுவாபரி சாலை- நியூ ஜல்பைகுரி, டாங்கோபோசி மற்றும் ஜரோலி 3-வது, 4வது பாதை அமைக்கப்படும். இந்த திட்டங்கள் மூலம் ரயில் வழிதடங்களில் நெரிசலை குறைக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Advertisement

இக்கூட்டத்துக்கு பின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,‘‘ 2025-26ம் ஆண்டு முதல் 2028-29ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.2000 கோடியில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசின் துறைசார்ந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 13,288 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2.9 கோடி உறுப்பினர்கள் பயனடைவர். இதை தவிர பிரதம மந்திரி கிசான் சம்பாதா யோஜனாவின் கீழ் உணவு பதப்படுத்தும் துறைக்கு ரூ.1920 கோடி கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Advertisement