மகாராஷ்டிரா, மபி உள்ளிட்ட 6 மாநிலங்களில் ரூ.11,169 கோடி ரயில்வே திட்டங்கள்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
Advertisement
இக்கூட்டத்துக்கு பின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,‘‘ 2025-26ம் ஆண்டு முதல் 2028-29ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.2000 கோடியில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசின் துறைசார்ந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 13,288 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2.9 கோடி உறுப்பினர்கள் பயனடைவர். இதை தவிர பிரதம மந்திரி கிசான் சம்பாதா யோஜனாவின் கீழ் உணவு பதப்படுத்தும் துறைக்கு ரூ.1920 கோடி கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Advertisement