தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா 20ம் தேதி தொடக்கம்: செப்.1ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி செப்.1ம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்களை விவரிக்கும் ஆவணி மூலத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் செப்.6ம் தேதி வரை கோயிலின் 2ம் பிரகாரத்தில் காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமி சந்திரசேகர் உற்சவ புறப்பாடு நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.1-ம் தேதி காலை வளையல் விற்றல் லீலை நடைபெறும். அன்று மாலையில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். செப்.2ல் நரியை பரியாக்கிய திருவிளையாடல், 3ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த லீலை, 4ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. 5ம் தேதி காலை சட்டத்தேர் நடக்கிறது. 6ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும். அன்று இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் விடை பெறுதல் நிகழ்வும் நடைபெறும். மதுரையம்பதியில் இறைவன் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில், 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது முக்கிய அம்சமாகும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.